சமுத்திராதேவி தொடரூந்தின் எஞ்சின், பாதி வழியில் பெட்டிகளை விட்டுச்சென்றது!

Date:

காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சமுத்திராதேவி தொடரூந்தின் பயணிகள் பெட்டிகளை பிரிந்து, அதன் எஞ்சின் மாத்திரம் பயணித்துள்ளது.

இன்று  09 களுத்துறை- வடக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

களுத்துறை-வடக்கு தொடரூந்து நிலையத்திற்கும், களுத்துறை இலக்கம் 1 தொடரூந்து நிலையத்திற்கும் இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தொடரூந்து திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தொடரூந்தின் இயந்திரம், தொடரூந்து பெட்டிகளிலிருந்து பிரிந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் வரை பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், சுமார் 15 நிமிடங்களின் பின்னர் தொடரூந்து மீண்டும் சீர்செய்யப்பட்டு, மருதானை நோக்கி பயணத்தை ஆரம்பித்ததாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...