சுரேஷ் பாய் உட்பட 6 பேர் கைது

Date:

சிங்கள புத்தாண்டு தினத்தன்று மருதானை டெக்னிக்கல் சந்தியில் கூரிய ஆயுதங்களால் ஒருவரை தாக்கி வெட்டிய குற்றச்சாட்டில் பஞ்சிகாவத்தையைச் சேர்ந்த சுரேஷ் பாய் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான பஞ்சிகாவத்தை சுரேஷ் பாயிடம் கைக்குண்டு மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாள் என்பன காணப்பட்டன.

கடந்த 14 ஆம் திகதி பிற்பகல் பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் வசிப்பவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சுரேஷ் பாய் உட்பட சுமார் பன்னிரண்டு பேர் மருதானை டெக்னிக்கல் சந்திக்கு சென்றுள்ளனர்.

தாக்குதலின் விளைவாக, அந்த நபரின் கை மற்றும் காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 6 பேரை கைது செய்ய விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் பல குற்றச்செயல்களுடன் முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் இருப்பவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...