கனடா, பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு நாடுகள் G-7 என்று அழைக்கப்படுகிறது.
ஜப்பான் பிரதமரின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோடியும் G-7 மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி ஹிரோஷிமாவில் இன்று மகாத்மா காந்தி உருவ சிலையை திறந்து வைத்துள்ளார்.
காந்தி சிலையை திறந்து வைத்த பின் உரையாற்றிய பிரதமர் மோடி,
G-7 மாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பான் வந்துள்ளதையடுத்து மகாத்மா காந்தி சிலையை திறந்து வைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஹிரோஷிமாவில் நிறுவப்பட்டுள்ள காந்தி சிலை அமைதி பாதைக்கு அழைத்து செல்லும்’ என தெரிவித்துள்ளார்.