தந்தையிடமிருந்து தாயை காப்பற்ற சென்ற மகளுக்கு நேர்ந்த கதி

Date:

அக்மீமன பிரதேசத்தில் கணவரால் மனைவி மீது நடத்தப்பட்ட தாக்குதல் மகள் மீது விழுந்ததில் 14 வயது மகள் பலத்த காயங்களுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சந்தேகநபரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலஹந்துவ பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் மனைவி கோணமுல்ல பிரதேசத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலைக்குச் சென்றுவிட்டு நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பிய போது கணவன் மோட்டார் சைக்கிளில் ஏறி வீட்டை விட்டு செல்வதற்கு தயாராக இருந்துள்ளார்.

அப்போது, ​​மகளை பயிற்சி வகுப்புக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருப்பதால், மோட்டார் சைக்கிளை எடுக்க வேண்டாம் என மனைவி கூறியுள்ளார்.

சந்தேகநபர் அருகில் இருந்த தடியை எடுத்து மனைவியை தாக்க முற்பட்ட போது, ​​மகள் தாயை காப்பாற்ற முன்வந்துள்ளார்.

சந்தேக நபர் மகளின் மார்பில் தடியால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...