நான் உன்னுடன் இருக்கிறேன், உன்னை நம்புகிறேன்! ; பத்திரனவுக்கு மலிங்க சொன்ன விடயம்

Date:

இலங்கை அணியின் இளம் வீரர் மதீஷ பத்திரனவுக்கு ஜாம்பவான் மலிங்க ஆதரவு தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியில் விளையாடி வரும் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன.

ஜூனியர் மலிங்க என்று அழைக்கப்படும் மலிங்க ஐ.பி.எல் தொடரில் மிரட்டலான பந்துவீச்சை காட்டினார். ஆனால் உலகக்கோப்பை தொடரில் இதுவரை விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் பத்திரன சொதப்பியுள்ளார்.

மொத்தம் 19 ஓவர்கள் வீசியுள்ள அவர் 185 ஓட்டங்களை விட்டுக்கொடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக உதிரி ரன்களை (Extra) வாரி வழங்கியுள்ளார்.

இதன்மூலம் அதிக உதிரி ரன்கள் (71) கொடுத்த மோசமான பந்துவீச்சாளராக மாறியுள்ளார். இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்க தனது ஆதரவினை பத்திரனவுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில், ‘நான் உன்னுடன் இருக்கிறேன் மதீஷ. மேலும் நான் உன்னை நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நான் ஹீரோ இல்ல… அவர்தான் ஹீரோ – சந்தானம்

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர்...

அடுத்த வருடம் மே மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த திட்டம்

இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல்...

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது- ஷேன் வாட்சன்

வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான...

13.4 ஒவரில் இலக்கை எட்டி ஆர்சிபி அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு...