பணத்திற்காக நிர்வாண காணொளிகளை இணையத்தில் பகிர்ந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட பெண் ஒரு பிள்ளையின் தாய் என்பதுடன், குறித்த காணொளியை பகிர்வதற்கு அவரது கணவரும் உடந்தையாக இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப்பிரிவின் அதிகாரிகளால் குறித்த பெண் கைதுசெய்யப்பட்டு, நேற்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நிமிடத்திற்கு 1000 ரூபா என்ற கணக்கில் குறித்த பெண் தனது வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பிலிட்ட நபர்களுடன் தனது நிர்வாண வீடியோக்களை பகிர்ந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.