மலேசியாவில் தனியார் வணிக ஜெட் விமானம் ஒன்று தரையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மலேசியாவில் தனியார் வணிக ஜெட் விமானம் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்ததுடன் நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பந்தப்பட்ட ஜெட் விமானத்தில் 6 பயணிகள் மற்றும் 2 விமான குழு உறுப்பினர்கள் இருந்ததாக நாட்டின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ராய்ட்டர்ஸ் தகவல்படி, விமானம் கட்டுப்பாட்டு நிலையத்தின் தொடர்பை இழந்ததுடன் நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த இருசக்கர வாகனம் மற்றும் கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என தெரிவித்துள்ளது.
நாட்டின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம், விமானத்தில் பயணித்த நபர்களின் எண்ணிக்கையை தெரிவித்து, விமான குழு மற்றும் பயணிகள் என எவரும் உயிர் பிழைக்கவில்லை என தெரிவித்து இருந்தது.
ஆனால் சமீபத்திய தகவலின் படி, மொத்தம் 10 பேர் இந்த விமான விபத்தில் உயிரிழந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
A private business jet has crashed in #Malaysia
There were six passengers and two crew members on board, the country's Civil Aviation Authority said in a statement, none of the crew and passengers survived. It is also reported that the death toll, according to the latest data,… pic.twitter.com/NiC60SODnh
— NEXTA (@nexta_tv) August 17, 2023