பல்பொருள் அங்காடிகளில் புதிய விதிமுறைகள்

Date:

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிகளில் அதன் பணியாளர்கள் தொடர்பில் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் , நுகர்வோர் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

 

அதன்படி, அடுத்த வாரம் முதல் இப்பயிற்சி ஆன்லைன் முறை மூலமாகவும் நிறுவனங்களின் பயிற்சி மையங்களிலும் தொடங்கப்படும்.

 

நிறுவன வளாகத்தினுள் வாடிக்கையாளர்களை மதித்து அவர்களுக்குத் தேவையான சேவையை வழங்குவதற்காக விசேட பயிற்சிகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த வெள்ளிக்கிழமை, 22ஆம் திகதி, பொரளையில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பெண் ஒருவரை கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ள நிலையில், பல்பொருள் அங்காடி நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்துள்ளது.

 

தங்கள் நிறுவனத்தின் சீருடையை அணிந்து நிறுவனத்திலோ அல்லது வேறு இடங்களிலோ பிரச்சினைக்குரிய வகையில் நடந்து கொள்ளும் ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பல்பொருள் அங்காடிகள் முடிவு செய்துள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...