பின்லாந்து மக்களின் மகிழ்ச்சி நீடிக்குமா..!

Date:

ரஷ்யா உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில், ரஷ்யாவின் எல்லையில் உள்ள பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய ராணுவ அமைப்பாக விளங்குகிறது நேட்டோ…. அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுடன், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 28 ஐரோப்பிய நாடுகளும் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன..இந்த நிலையில், பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நேட்டோவின் 31வது நாடாக தன்னை இணைத்துக்கொண்டது பின்லாந்து.

ரஷ்யாவுடன் சுமார் ஆயிரம் கிலோ மீட்டருக்கும் மேல் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் பின்லாந்து, நேட்டோவில் இணைந்திருப்பது உலக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனால், ரஷ்யாவுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில், நேட்டோவின் உறுப்பு நாடுகள் பின்லாந்து எல்லைக்கு ராணுவ துருப்புகளை அனுப்பக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அப்படி நேர்கையில், தகுந்த பதிலடி அளிப்போம் என ரஷ்யாவும் எச்சரிக்கை விடுத்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் வெளியான ஆய்வு ஒன்றில், உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தேர்வானது.தற்போதைய சூழ்நிலையை உற்றுநோக்கும்போது பின்லாந்து மக்களின் மகிழ்ச்சி நீடிக்குமா என்பது சந்தேகமே.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...