புத்தாண்டுக்கு சொந்த இடங்களுக்கு செல்வோரிடம் அதிக பேரூந்து கட்டணம் அறவிடப்படுவதாக குற்றச்சாட்டு!

Date:

சித்திரைப் புத்தாண்டுக்காக தங்களது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களிடம் திருத்தப்பட்ட கட்டணத்தை அறவிடாமல் பேரூந்து ஊழியர்கள் அதிக கட்டணம் அறவிடுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களுக்காக அதிக கட்டணம் அறவிடப்படுவதாக பயணிகள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவை இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்திடம் வினவியது.

இதற்கு பதிலளித்த அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜரத்ன மேலதிக சேவைகளை வழங்கினால் அதிக கட்டணத்தை அறவிட வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் இவ்வாறு இடம்பெற்றுள்ளது.

பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக கட்டணத்தை அறவிடும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக கட்டணத்தை அறவிடும், பேரூந்துகளை கண்காணித்து அவர்களுக்கு எதிராக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது.

அது தொடர்பான முறைப்பாடுகளை 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...