புத்தளத்திலிருந்து – நுவரெலியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்று, கம்பளை – நூவரெலியா பிரதான வீதியின் ஹெல்பொட பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
இந்த பேருந்தில் சுமார் 20 பேர் வரை பயணம் செய்துள்ளனர்.
காயமடைந்த 08 பேரில் நால்வர் கொத்மலை பிராந்திய வைத்தியசாலையிலும், நால்வர் புஸ்ஸல்லாவ வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பேருந்தின் சாரதி தூங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.