பொரளையில் அதிரடி சோதனை !

Date:

கொழும்பு – பொரளை பகுதியில் காவல்துறையினர், விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடத்திய விசேட கூட்டு சோதனை நடவடிக்கையில் குறைந்தது 35 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களும், ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு பேரும், கஞ்சாவுடன் ஆறு சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், 2 வாள்களை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களும், பிடியாணை நிலுவையில் உள்ள இரண்டு சந்தேக நபர்களும், மேலும் 19 சந்தேக நபர்களும் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில்,ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடமிருந்து ஹெரோயின் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக கருதப்படும் 26 இலட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட ஒருவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டியதாக கருதப்படும் 215,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று (12) புதுக்கடை மற்றும் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...