மன்னருடைய முடிசூட்டுவிழாவில் நீண்ட நேரம் வாளேந்தி நின்றது எப்படி?

Date:

பிரித்தானிய மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவின்போது, அவருக்கு முன்னால் வாள் ஒன்றை ஏந்தி நடந்தவர் பெயர் பென்னி மார்டண்ட் (Penny Mordaunt). அவர் Lord President of the Council என்னும் முக்கிய பொறுப்பு வகிக்கிறார். அத்துடன், பென்னி, பிரித்தானிய நாடாளுமன்றத்தின் கீழவையின் தலைவரும் ஆவார்.

பென்னி, ஒரு மணி நேரத்துக்கும் மேல் வாளேந்தி நின்றதை அவரது சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பாராட்டியுள்ளனர்.

மன்னருடைய முடிசூட்டுவிழாவில் நீண்ட நேரம் வாளேந்தி நின்றது எப்படி என்னும் இரகசியத்தை போட்டு உடைத்துள்ளார் பென்னி.

இப்படி வாளேந்தி நிற்பதற்காக பயிற்சி எடுத்தீர்களா என பென்னியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர், தான் இத்கும முன் ஆறு மாதங்களாக உடற்பயிற்சிக்கூடம் பக்கமே போகவில்லை என்றார். ஆனால், நம் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்துகொள்வது நல்லதுதானே என்றும் கூறினார் அவர்.

உண்மையில், பிரச்சினை ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை உறுதி செய்துகொள்வதற்காக, முடிசூட்டுவிழாவுக்கு முன் சில வலி மாத்திரைகள் எடுத்துக்கொண்டேன் என்கிறார் பென்னி.

அத்துடன், கடற்படையில் தான் எடுத்துக்கொண்ட பயிற்சியும் நீண்ட நேரம் நிற்பதற்கு தனக்கு உதவியது என்றும் கூறியுள்ளார் பென்னி.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...