மறுசீரமைப்பு தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது

Date:

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக சம்பந்தப்பட்ட குழுவுடன் மீளாய்வு செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

உத்தேச புதிய மின்சாரச் சபை சட்டத்தின் செயற்பாட்டு வரைவு மேம்பாட்டு முகவர்கள், வலுசக்தி நிபுணர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்களுடன் பகிரப்பட்டுள்ளதாக தமது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், குறித்த குழு இலங்கை மின்சார சபையின் நிர்வாகம் மற்றும் அதன் பொறியிலாளர்கள் சங்கம் ஆகியவற்றை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இலங்கை மின்சாரசபையில் உள்ள ஏனைய தொழிற்சங்கங்களையும் விரைவில் குறித்த குழு சந்திக்கவுள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஏப்ரல் மாத இறுதிக்குள் உத்தேச புதிய மின்சாரச் சட்டத்தின் இறுதி வரைவு கிடைக்கும் என தாம் நம்புவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...