மூன்று கொலை சம்பவங்கள் பதிவு

Date:

நாட்டின் பல பகுதிகளில் மூன்று கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓவகந்த பகுதியில் இரண்டு பெண்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காதல் உறவில் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று (26) இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்தவர் தனது வீட்டில் இருந்தபோது, ​​அவரது தாயாரின் இளைய சகோதரர் வீட்டிற்கு வந்து இறந்தவரையும் அவரது தாயாரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

ரத்கம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலையை செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லந்தோட்ட பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

லந்தோட்டை அம்பலாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் சென்று கொண்டிருந்த போது, ​​பலர் வந்து கூரிய ஆயுதங்களால் தாக்கியதில், பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளார்.

பழைய முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது.

இதேவேளை, திவுலபிட்டிய மரதகஹமுல சந்திக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மரதகஹமுல சந்திக்கு அருகில், வீதியில் பயணித்த காரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தடுத்து நிறுத்தி, கார் சாரதியை கூரிய ஆயுதத்தால் தாக்கியதுடன், காரில் இருந்த ஒருவரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று (26) பிற்பகல் உயிரிழந்துள்ளார்.

மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 49 வயதான வித்தினாபஹா என்பவரே உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நான் ஹீரோ இல்ல… அவர்தான் ஹீரோ – சந்தானம்

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர்...

அடுத்த வருடம் மே மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த திட்டம்

இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல்...

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது- ஷேன் வாட்சன்

வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான...

13.4 ஒவரில் இலக்கை எட்டி ஆர்சிபி அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு...