ரஷியாவின் 80 சதவிகித கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்த இந்தியா, சீனா

Date:

உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது. இதனை தொடர்ந்து ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தன. மேலும், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலையும் மேற்கத்திய நாடுகள் நிறுத்தின.

இதனை தொடர்ந்து ரஷியா கச்சா எண்ணெய் விற்பனையை ஆசியா பக்கம் திருப்பியது. ரஷியாவிடமிருந்து இந்தியா மற்றும் சீனா அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த மாதத்தில் ரஷியாவிடமிருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்த நாடுகள் பட்டியலில் இந்தியா – சீனா முன்னிலையில் உள்ளன.

இந்தியாவும், சீனாவும் இணைந்து கடந்த மாதம் ரஷியாவின் 80 சதவிகித கச்சா எண்ணெயை கொள்முதல் செய்துள்ளது. ரஷியா கச்சா எண்ணெய்யை தள்ளுபடி விலையில் விற்பனை செய்துவரும் நிலையில் தினமும் 5 லட்சம் பேரல் வாங்கி வந்த சீனா தற்போது 22 லட்சம் பேரல் கொள்முதல் செய்து வருகிறது.

அதேபோல், ரஷியாவிடம் குறைவாகவே கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துவந்த இந்தியா தற்போது தினமும் 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது.

 

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...