வாகன மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது

Date:

வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வாகனங்ளை வைத்து போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட மூவரை பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பாணந்துறை பிரதேசத்தில் நபர் ஒருவரிடமிருந்து வாகனம் ஒன்றை பெற்று போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்ததாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 02 கார்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் போது, ​​விற்பனை மற்றும் அடமானம் வைக்கப்பட்ட மேலும் 02 கார்கள், போலியான சாரதி அனுமதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பல ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இருவரும் தம்புள்ளை மற்றும் கலேலியா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், சந்தேக நபரான பெண் பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நான் ஹீரோ இல்ல… அவர்தான் ஹீரோ – சந்தானம்

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர்...

அடுத்த வருடம் மே மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த திட்டம்

இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல்...

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது- ஷேன் வாட்சன்

வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான...

13.4 ஒவரில் இலக்கை எட்டி ஆர்சிபி அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு...