விருதுநகர் பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி வெடி விபத்து

Date:

விருதுநகர் மாவட்டம் வி.ராமலிங்கபுரம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதனிடையே விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வபோது இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இன்று பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்த போது இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது பட்டாசு ஆலையில் வெடி தயாரிக்கும் அறையின் மீது மின்னல் தாக்கி வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் அங்கு பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த 55 வயது பெண் தொழிலாளர் புஷ்பம் என்ற பெண் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தீயணைப்புத்துறையினர் பட்டாசு ஆலைக்கு விரைந்து வந்து தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...