வெளியில போனவுடனே இந்த பிரச்சனை வருமோ? முதல்முறையாக பயந்த மாயா..!

Date:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற குற்றச்சாட்டு காரணமாக வெளியேற்றப்பட்டார். அவரது வெளியேற்றத்திற்கு மாயா, பூர்ணிமா, ஐஷு, அட்சயா, ரவீனா மற்றும் ஜோவிகா ஆகியோர்கள் தான் முக்கிய காரணம் என்பதும் இவர்கள் பிரதீப்பால் தங்களுக்கு ஆபத்து என கமல்ஹாசன் இடம் ரெட்கார்ட் காட்டியதால் தான் அவர் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி கடந்த சனி ஞாயிறு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் ’பிரதீப் வெளியேற்றத்திற்கு நீங்கள் கொடுத்த ரெட் கார்டு தான் காரணம் என்றும் என்னை பிளேயர் ஆக சேர்க்காதீர்கள் என்றும் நீங்கள் உங்களுக்கு அநியாயம் நடந்ததாக கூறி ரெட் கார்ட் கொடுத்ததால் தான் பிரதீப் வெளியேறினார் என்பதையும் திரும்பத் திரும்ப அழுத்தம் திருத்தமாக கூறி பிரதீப் வெளியேற்றத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார்.

இந்த நிலையில் தற்போது தான் மாயா தனது தவறை உணர ஆரம்பித்தது போல் தெரிகிறது. ’பிரதீப் வெளியேற்றம் என்பது நம்மால் தான் நடந்தது என்பது தெரிய வந்தால் வெளியே அவருடைய ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்வது’ என்று நிக்சனிடம் கூறும் காட்சியின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

அப்போது நிக்சன் ’வெளியே போய் பிரதீப்பை நேரில் சந்தித்து சமாளித்துக் கொள்ளலாம்’ என்று கூற அப்போதும் மாயா தனது கெத்தை விட்டுக் கொடுக்காமல் ’அதெல்லாம் சந்திக்க முடியாது, அவன் என்ன பெரிய இவனா’ என்று கூறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

“குட் பேட் அக்லி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

விடாமுயற்சியை அடுத்து நடிகர் அஜித்தின் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன்...

தகாத உறவை கண்டித்தால் சிக்கன் ரைஸில் விஷம்

நாமக்கல் பஸ் நிலையம் எதிரில் ஜீவானந்தம் (வயது 32) என்பவர் ஓட்டல்...

டி20 உலகக் கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

ஐ.சி.சி.-யின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் துவங்க...

ஸ்டார்க் வேகத்தில் வீழ்ந்த மும்பை- 24 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா...