ஹிக்கடுவ துப்பாக்கி சூட்டில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் காயம்!

Date:

ஹிக்கடுவ – சீனிகம விகாரைக்கு அருகில் இன்று முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ரத்கம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் காயமடைந்து, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல் 11 மணியளவில் உந்துருளியில் சென்ற இருவர் துப்பாக்கி சூட்டை நடத்தியதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

சந்தேகநபர்கள் குறித்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களை தேடும் பணிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பிரதேச சபை உறுப்பினர் தமது மகிழுந்திலேயே ஹிக்கடுவ காவல்நிலையத்துக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து, அவர் காவல்துறையினரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் ரத்கம பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஒருவரே காயமடைந்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...