18 வயதான யுவதி மூவரால் பாலியல் துஷ்பிரயோகம்

Date:

பணி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 18 வயது யுவதியை வீட்டுக்கு கூட்டிச்சென்று விடுவதாக கூறி லொறி ஒன்றில் ஏற்றிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் கூட்டுப் பலாத்காரம் செய்த குற்றத்துக்காகவும் லொறியின் உரிமையாளரும் அதற்கு உடந்தையாக இருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 3 ஆம் திகதி இரவு பாணந்துறை நகரில் வியாபாரம் செய்துவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த யுவதியை லொறியில் ஏற்றிக்கொண்டு சென்று வாத்துவ பிரதேசத்தில் உள்ள வெறிச்சோடிக் கிடந்த தோட்டத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு செய்திருந்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நான் ஹீரோ இல்ல… அவர்தான் ஹீரோ – சந்தானம்

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர்...

அடுத்த வருடம் மே மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த திட்டம்

இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல்...

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது- ஷேன் வாட்சன்

வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான...

13.4 ஒவரில் இலக்கை எட்டி ஆர்சிபி அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு...