24 பள்ளி மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை ; 56 வயது ஆசிரியர் செய்த வேலை

Date:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 1 வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை சுமார் 110 மாணவர்களும், 129 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் லட்சுமணன் ( 56) என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆண்டு முதல் பள்ளி மாணவிகளை அடிக்கடி அழைத்து தினமும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக வெளியில் சொல்லக்கூடாது என மாணவிகளை மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், நாளுக்கு நாள் ஆசிரியரின் தொல்லை தாங்க முடியாததால் வேறு வழியில்லாமல் மாணவிகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பெற்றோரிடம் கண் கலங்கிய படி தெரிவித்தனர். இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக தண்டராம்பட்டு அனைத்து மகளிர் பொலிஸ் நிலையித்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.

இந்த முறைப்பாடு அப்படிடையில் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோரிடம் வீடு வீடாக சென்று பொலிஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆசிரியர் லட்சுமணன் மாணவிகள் மீது பாலியல் தொல்லையில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து ஆசிரியர் லட்சுமணனை பொலிஸார் கைது செய்தனர். கைதான ஆசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட 10 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளியில் படிக்கும் 24 மாணவிகளிடம் ஆசிரியரே பாலியல் தொல்லையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...