மாணவர்கள் துஷ்பிரயோகம்..! அதிபர் கைது!

Date:

கதிர்காமம், கோதமிபுர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் கதிர்காமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தப் பாடசாலையில் மூன்று சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த அதிபரால் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மாணவர் ஒருவர் தனது வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர், மேலும் இரண்டு சிறுவர்களும் தாங்களும் இதுபோன்ற துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகியதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் படி, அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் இச்சம்பவத்தை மூடி மறைக்க சில குழுக்கள் செயற்படுவதாக அந்த பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...