ஐபிஎல் 2024-ன் 19-வது லீக் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் கூறுகையில் “இந்த ஆடுகளத்தில் முதலில் பந்து வீச விரும்புகிறோம். இது புது ஆடுகளம்.
வேகப்பந்து வீச்சுக்கு (சீம்) உதவியாக இருக்கும். ஆட்டத்தின் பின் பகுதியில் பனியின் தாக்கம் இருப்பதாக எதிர்பார்க்கிறோம்” என்றார்.