ஆர்சிபி அணிக்கு சாதனை இலக்கு நிர்ணயித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்

Date:

ஐபிஎல் தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய டிராவிஸ் ஹெட் – அபிஷேக் சர்மா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அபிஷேக் 34 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அசத்தினார்.

39 பந்துகளில் இந்த சதத்தை அவர் பதிவு செய்தார். தொடர்ந்து ஆடிய அவர் 41 பந்தில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஹெட் 4-வது இடத்தில் உள்ளார்.

இதனை தொடர்ந்து கிளாசன் மற்றும் மார்க்ரம் தங்கள் பங்குக்கு அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளாசன் அரை சதம் விளாசினார். அவர் 67 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி தரப்பில் ரீஸ் டாப்லே 4 ஓவர்களில் 68 ரன்கள் விட்டுகொடுத்து 1 விக்கெட்டை விழ்த்தினார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...