ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர்! 492 ஓட்டங்கள் குவித்த அயர்லாந்து அணி

Date:

அயர்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் பந்து வீச்சாளர் ஜெய சூர்யா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இலங்கையின் கல்லி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை மற்றும் அயர்லாந்துக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணியினர் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடினர். இதில் அயர்லாந்து அணியின் ஸ்டிர்லிங், கர்டிஸ் கேம்பர் ஆகியோர் சதமடித்துள்ளனர்.

மேலும் அதிரடியாக ஆடிய அயர்லாந்து அணியின் கேப்டன் பால்பிர்னி 95 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து விக்கெட் கீப்பர் டுக்கர் 80 ஓட்டங்கள் எடுத்து இருந்த நிலையில் விஷ்வா ஃபெர்னாண்டோ பந்தில் போல்ட் ஆனார்.

இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று அயர்லாந்து அணி 492 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆகியுள்ளது.

இலங்கை தரப்பில் சிறப்பாக பந்து வீசிய பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். விஷ்வா ஃபெர்னாண்டோ, அசிதா ஃபெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி விக்கெட் ஏதும் இழக்காமல் சிறப்பாக விளையாடி வருகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...