கடற்றொழில் துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சீனாவின் முதலீட்டாளர்கள் குழுவொன்று விருப்பம் தெரிவித்துள்ளது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனான சந்திப்பில் அவர்கள் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், தமது படகுகளை பயன்படுத்தி பிடிக்கப்படும் மீன்களை இலங்கையிலிருந்து தமது நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் குறித்த முதலீட்டாளர்கள் குழு விரும்பம் வெளியிட்டுள்ளது.
தமக்கான அனுமதிகளை கடற்றொழில் அமைச்சு வழங்குமாயின் கடற்றொழில்துறையில் பாரிய முதலீடுகளை செய்வதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், குறித்த முதலீட்டாளர்களின் திட்டவரைபை ஆராய்ந்து பார்த்ததன் பின்னர் உரிய பதில்களை வழங்குவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.