கட்டுநாயக்க – கோட்டை 187 சொகுசு தனியார் பஸ்களின் வேலைநிறுத்தத்தை அடுத்து இன்று (29) காலை முதல் பஸ்கள் வழமை போன்று இயங்கும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் கம்பஹா மாவட்டத் தலைவர் லம்பேர்ட் மதுரகே தெரிவித்தார்.
கடந்த 26 ஆம் திகதி. ஆரம்பமான பஸ் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்புக்கு காரணமான வீதிப் பிரச்சினை தொடர்பில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுடன் நேற்று (28) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பலனாக பஸ் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.