கிழக்கு ஆப்பிரிக்காவில் தொடர்மழையால் ஓராண்டில் 22 லட்சம் பேர் பாதிப்பு

Date:

பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அந்தவகையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் தொடர்ச்சியான வெள்ளம், நிலச்சரிவுகளை எதிர்கொண்டு வருவதாக ஐ.நா.வின் மனிதாபிமான நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி கடந்த ஓராண்டில் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கென்யா, சோமாலியா, சூடான் உள்ளிட்ட நாடுகளில் தொடர்மழை, வெள்ளப்பெருக்கு ஆகிய காரணங்களால் சுமார் 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அங்கு சுகாதாரம், உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றில் குறைபாடு நிலவுகிறது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்த ஆண்டுக்கான மழைக்காலம் வருகிற செப்டம்பர் மாதம் வரை தீவிரமடையும் என்பதால் இடம்பெயர்தல் மேலும் அதிகரிக்கலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பதவி விலகலை அறிவித்தார் ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம்...

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...