குளவி கொட்டுக்கு இலக்கான 17 மாணவர்கள் வைத்தியசாலையில்

Date:

மதவாச்சி, கடவத்கம பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

கடவத்கம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மேலதிக வகுப்புகளில் கலந்துகொண்ட மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

குறித்த பாடசாலையில் இருந்த குளவிக்கூட்டை குரங்குகள் கலைத்ததன் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

தாக்குதலில் காயமடைந்த மாணவர்களில் 10 ஆண் பிள்ளைகளும் 7 பெண் பிள்ளைகளும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இதேவேளை காயமடைந்த மாணவர்கள் 11 தொடக்கம் 16 வயதுக்குட்பட்ட , கடவத்கம பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரிய வந்துள்ளது.

 

குளவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் மதவாச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக ஒருவர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...