கோரமண்டல் ரெயிலில் சென்னை வர 800க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்

Date:

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரெயில் இரவு 7 மணி அளவில் மற்றொரு ரெயில் மீது மோதி விபத்திற்குள்ளானது. பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஹார் ரெயில் நிலையம் அருகே விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய பேரிடர் மீட்புப்படையினர் சுமார் 120 க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்ப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரம் என்பதால் மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோரமண்டல அதிவிரைவு ரெயிலில் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரெயில் விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒடிசாவில் கோரமண்டல அதிவிரைவு ரெயில் விபத்தில் காயமடைந்த 132 பேர் இதுவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோரமண்டல் ரெயிலில் சென்னை வர 800க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். மீட்கப்பட்டோரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 60க்கும் அதிகமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

நிலமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என ஒடிசா முதல்-மந்திரி நவீன்பட்நாயக் கூறியுள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...