லங்கா பிரீமியர் லீக் தொடரின் இன்றைய நாளுக்கான இரண்டாவது போட்டியில் தம்புள்ளை அணி 09 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பாடிய தம்புள்ளை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 08 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக குசல் பெரேரா 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில், 135 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
அந்த வகையில் தம்புள்ளை அணி 09 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.