7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் முதலாவது குவாலிபையர் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதையடுத்து எலிமினேட்டர் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி மதுரை பாந்தர்சை வீழ்த்தி 2வது குவாலிபயர் ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.
இதையடுத்து நெல்லை சங்கர் நகரில் உள்ள ஐ.சி.எல். மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்சும், நெல்லை ராயல் கிங்சும் மோதுகின்றன.
இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.