மட்டக்களப்பு களுதாவளையில் இன்று ஏற்படவிருந்த அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு களுதாவளை கடலில் இளைஞர்கள் சிலர் இயந்திரம் பொருத்திய சிறிய படகு ஒன்றில் சவாரி செய்தனர்.
இதனையடுத்து அதில் அங்கிருந்து ஆண்களும் பெண்களும் ஏறிய நிலையில் படகின் இயந்திரம் இயங்கவில்லை.
இந்த நிலையில் படகு கரையில் இருந்து குறிப்பிட்ட தாரத்தில் தத்தளித்துக்கொண்டிருந்தது.
இதன்போது பாரிய அலை ஒன்று குறித்த படகை கரையை நோக்கிதாக்கி அடித்ததள்ளப்பட்டதாள்
இதில் ஆண் ஒருவர் வீழ்ந்த நிலையில் அவர் மீது படகு வீழ்ந்துள்ளது.
எனினும் அவர் அங்கிருந்தோரால் மீட்கப்பட்டார். ஏனையவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படவில்லை.