பொலனறுவை – மன்னம்பிட்டி பகுதியில் நேற்று விபத்துக்குள்ளான பேருந்தை செலுத்திய சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று பொலனறுவை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, அவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், இந்த விபத்தில் காயமடைந்த 41 பேர் மன்னம்பிட்டிய மற்றும் பொலனறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.