மாணவர்களின் புத்தகப் பையைில் போதை கலந்த இன்ஹேலர்கள்

Date:

குருநாகல் பகுதியில் பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளில் இருந்து சந்தேகத்துக்கு இடமான திரவம் அடங்கிய இன்ஹேலர்கள் சில மீட்கப்பட்டதாக கொக்கரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

 

பாடசாலை மாணவர்கள் சிலரின் புத்தகப் பைகளில் இருந்து மீட்கப்பட்டதை அடுத்து அவற்றை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனைச் செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் வர்த்தகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கொக்கரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

 

குறித்த நபர், கொக்கரெல்ல பிரதேசத்தில் தொலைபேசிக்கான உபகரணங்களை விற்பனை நிலையத்தை நடத்தி வருபவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

 

அந்த பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் ஒன்பதாம் தரத்தில் கல்விப்பயிலும் மாணவர்கள் சிலரின் பாடசாலைப் புத்தகப்பையை அந்த வகுப்பாசிரியர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இவை கைப்பற்றப்பட்டன. அதன்பின்னர் குறித்த ஆசிரியர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

குருநாகல் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல் சந்தன அபேசிங்கவின் பணிப்புரையின் பேரில் வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த கித்சிறி ஜயலதின் பூரண மேற்பார்வையின் கீழ் கொகரெல்ல பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் விஜேரத்ன தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...