மாற்றுத்திறனாளி ஜோடிக்கு திருமணம் நடத்தி வைத்த ஊர்மக்கள்

Date:

தூத்துக்குடி, எம்.சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் தங்கம். இவர் கூலித் தொழிலாளி. இவருடைய மகள் இசக்கிஅம்மாள் (39). இவர் மாற்றுத்திறனாளி.

இவருக்கு நீண்ட வருடங்களாக திருமணம் நடைபெறாமல் இருந்தது. இதனையடுத்து இசக்கி அம்மாளுக்கு ஊரில் உள்ள மக்கள் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தார்கள்.

சென்னை, மணலியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சதீஷ்குமார் (41) என்பவரும் நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் இருந்து வந்தார்.

இதை அறிந்த எம்.சவேரியார் புரத்தைச் சேர்ந்த மக்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.

இதனையடுத்து, எம். சவேரியார்புரத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் ஊர் மக்கள் முன்னிலையில் நேற்று இரவு திருமணம் நடைபெற்றது.

இத்திருமணத்திற்கு தூத்துக்குடி மாநகராட்சி 57-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெயலட்சுமி, தூத்துக்குடி தெற்கு பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளரும், 57-வது வட்ட அ.தி.மு.க. செயலாளருமான சுடலைமணி ஆகியோர் தலைமை தாங்கி நடத்தி வைத்தனர்.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...