மீண்டும் எம்.பி. ஆனார் ராகுல் காந்தி

Date:

ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவை திரும்ப பெற்றது மக்களவை செயலகம். அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தகுதி நீக்க உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கடந்த வெள்ளிக்கிழமை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

 

இதையடுத்து தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்து ராகுல் காந்தியை மீண்டும் வயநாடு தொகுதி எம்.பி.யாக அறிவிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவை மக்களவை செயலகம் திரும்ப பெற்றது. வயநாடு எம்.பியாக ராகுல் காந்தி தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று அல்லது நாளை நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்பார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...