கடலோர புகையிரத மார்க்கத்தில் வெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
தெஹிவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியே இவ்வாறு குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (03) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.