வங்கதேசத்தில் படகு கவிழ்ந்து விபத்து 4 பேர் பலி..!

Date:

வங்கதேச தலைநகர் டாக்கா அருகே உள்ள புரிகங்கா ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஞாயிறு இரவு 8:15 மணி அளவில் டாக்காவின் சதர்க்காட்டில் இருந்து டெல்காட் நோக்கி சென்று கொண்டிருந்த படகு மணல் திட்டு மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவம் அறிந்து 3 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு துறை மற்றும் கடலோர காவல் படையின் மீட்பு குழுவினர் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் தற்போது வரை 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 4 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 1 குழந்தை உட்பட 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த படகில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்ற முழு விவரம் தெரியாததால் மேலும் பலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது உறவினர்களை கண்டறிந்து ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...