விலை அதிகரிப்புக்கு நுகர்வோர் அதிகார சபையின் அனுமதி கட்டாயம்

Date:

உள்நாட்டு கோதுமை மா நிறுவனங்கள் எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலையை அதிகரிக்குமாயின் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அனுமதியைப் பெற வேண்டும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (18) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய அமைச்சர், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை 10 ரூபாவினால் விரைவில் குறைக்க வேண்டும்.

எவ்வாறாயினும், பேக்கரி பொருட்களுக்கு தேவையான ஏனைய பொருட்களின் விலையை ஒப்பிடும் போது குறையாத காரணத்தினால் தமது உற்பத்திகளின் விலைகளை குறைப்பது சிக்கலாக உள்ளதாக அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதேவேளை, கோதுமை மா பொருட்களின் விலைகளுக்கும் கட்டுப்பாட்டு விலை தேவை என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவுக்கு மாத்திரமல்ல அனைத்து பேக்கரி பொருட்களுக்கும் கட்டுப்பாட்டு விலை அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அவ்வாறான விலை நிர்ணயம் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அதிகபட்ச ஆதரவை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...