Home Blog Page 303

டெல்லி கேபிடல்ஸ் அணியை சூறையாடிய மும்பை இந்தியன்ஸ்: 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

டெல்லி கேபிடல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

105 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களும் இழப்பு

இந்தியாவில் நடைபெற்று வரும் பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தேர்வு செய்து களமிறங்கியது.

ஆனால் மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் டெல்லி கேபிடல்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.

டெல்லி கேபிடல்ஸ் அணியில் அதிகபட்சமாக லேனிங் 43 ஓட்டங்கள் குவித்து இருந்தார், பந்துவீச்சை பொறுத்தவரை மும்பை அணியில் சைகா இஷாக், ஹேலி மேத்யூஸ் மற்றும் வோங் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்கள்.

மும்பை அபார வெற்றி

மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ்

இதையடுத்து 106 ஓட்டங்கள் என்ற சற்று எளிதான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஓட்டங்களை குவிக்க தொடங்கினர்.

தொடக்க ஆட்டக்காரர்களான யாஸ்திகா பாட்டியா மற்றும் ஹேலி மேத்யூஸ் இருவரும் அதிரடியாக ஓட்டங்களை குவித்தனர், அதிகப்பட்சமாக யாஸ்திகா பாட்டியா 41 ஓட்டங்களையும், ஹேலி மேத்யூஸ் 32 ஓட்டங்களையும் குவித்து அசத்தினர்.

இதனால் 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 109 ஓட்டங்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியை கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நடந்து கொண்டிருக்கும் மகளிர் பிரீமியர் லீக்கில் தொடர்ந்து மூன்றாவது வெற்றியை மும்பை இந்தியன்ஸ் அணி பதிவு செய்துள்ளது, அத்துடன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இன்று மாசி சங்கடஹர சதுர்த்தி.. விரதம் இருந்தால் இத்தனை பலன்களா?

சங்கடஹர சதுர்த்தி
சங்கடஹர சதுர்த்தி

மாசிமாதம் புண்ணிய மாதமாகக் கருதப்படுகிறது. உத்திராயண புண்ணியகாலத்தில் வரும் இந்த மாசி மாதத்தில் செய்யும் நோன்புகள், வழிபாடுகள் எல்லாம் பலமடங்கு பலன்களை அருளும் என்பது ஆன்றோர் வாக்கு. இந்த மாதத்தில் வரும் அனைத்து விரதங்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த மாதத்தில் வரும் விரதங்களைக் கடைப்பிடித்தால, ஆண்டுமுழுவதும் விரதங்களை கடைப்பிடித்த நற்பலன் கிடைக்கும். அப்படி இந்த மாதத்தின் இறுதியில் நமக்கு வாய்த்திருக்கிறது, சங்கட ஹர சதுர்த்தி விரதம்.

சங்கட ஹர சதுர்த்தி விரதம், விநாயகப் பெருமானுக்குரியது. விநாயகரை வழிபடுவது என்பது அனைத்துவிதமான பிரச்னைகளுக்குமான தீர்வை அளிப்பது. பிரச்னைகள் தீரப் பல வழிகளைத் தேடி அலைந்து கொண்டிருப்பவர்கள் கடைப்பிடித்துப் பயன்பெற வேண்டிய விரதம் இது.

இன்று அதிகாலையில் நீராடி, விநாயகரை வழிபட்டு விரதத்தைத் தொடங்கலாம். உபவாசம் இருக்க முடிபவர்கள் நாள் முழுவதும் உண்ணா நோன்பிருந்து விரதமிருக்கலாம். இயலாதவர்கள் ஒருவேளை உணவு உண்டு விரதமிருக்கலாம். மாலையில் மீண்டும் நீராடி, விநாயகர் வழிபாட்டில் ஈடுபடலாம்.

வீட்டில் விநாயகரை வழிபடுபவர்கள், ஏற்கெனவே வீட்டில் விநாயகர் விக்கிரகமோ படமோ இருந்தால் அதற்குப் பூஜைகள் செய்யலாம். இருந்தாலும் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதற்குப் பூஜை செய்து, அதற்குப் பின் படம் அல்லது விக்கிரகத்துக்குப் பூஜை செய்ய வேண்டும். விநாயகருக்குரிய அஷ்டோத்திரங்களைச் சொல்லி வழிபடலாம். இயலாதவர்கள், விநாயகர் அகவல் போன்ற பாடல்களைப் பாடலாம். விநாயகரின் நாமங்களைச் சொல்லி அருகம்புல்லால் அர்ச்சனை செய்ய வேண்டும். விநாயகருக்கு எளிய நைவேத்தியங்களே பிரியம். தனியாகப் பிரசாதங்கள் செய்ய நேரம் வாய்க்காதவர்கள் பொரி, கடலை, வெல்லம் முதலியன வைத்து வழிபடலாம். முடிந்தவர்கள் மோதகம் செய்து நைவேத்தியம் செய்யலாம்.

ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்பவர்கள், விநாயகருக்கு செய்யப்படும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசனம்செய்வது மிகவும் சிறப்பு மிக்கதாகும். விநாயகருக்கு செய்யப்படும் அபிஷேகங்களை பக்தியோடு தரிசனம் செய்தாலே மனக்கஷ்டங்கள் அத்தனையும் தீர்ந்துவிடும். விநாயகருக்கும் சந்திரனுக்கும் செய்யப்படும் தீபாராதனைகளைத் தரிசனம் செய்ய, நம் கஷ்டங்கள் எல்லாம் தீரும். தொடர்ந்து 9 சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகர் ஆலயம் சென்று வணங்கிவந்தால் சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

சங்கடஹர சதுர்த்தி தினத்தில்தான், சந்திரனும் செவ்வாயும் விநாயகரை வழிபட்டு சகல நன்மைகளையும் அடைந்தனர். எனவே, ஜாதகத்தில் சந்திரன் மற்றும் செவ்வாய் பலம் குன்றியிருப்பவர்கள், கட்டாயம் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை மேற்கொள்ளவேண்டியது அவசியம்.

இன்றைய ராசிபலன் 10.03.2023

இன்றைய ராசிபலன்

மேஷம்

சமயோசிதமாகவும் சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அமோகமான நாள்.

ரிஷபம்

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்று வீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

மிதுனம்

திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும் நாள்.

கடகம்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். பிரபலங்களின். நட்பு கிடைக்கும் வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்‌. துணிச்சல் அதிகரிக்கும் நாள்.

சிம்மம்

குடும்பத்தில் உள்ளவர்களின் பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மனசாட்சிப்படி செயல்பட வேண்டிய நாள்.

கன்னி

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. அவசர முடிவுகளை தவிர்க்கப் பாருங்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

துலாம்

கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உறவினர்கள் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

விருச்சிகம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

தனுசு

சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சாதிக்கும் நாள்.

மகரம்

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் மாற்றம் உண்டாகும் நாள்.

கும்பம்

சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களை யெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்கவேண்டி வரும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.

மீனம்

பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிடைக்கும். உத்தியோகத்தில் தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.

 

பாகிஸ்தானின் கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் !

#image_title

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ‘பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் சர்தாரி, ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை எழுப்பியுள்ளார்.

பின்னர் ஐ.நா. சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசித்ரா கம்போஜ் பேசும்போது, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதிநிதி கூறிய அற்பமான, அடிப்படையற்ற மற்றும் அரசியல் நோக்கத்துடன் கூடிய கருத்துக்களை நிராகரிக்கிறேன்.

இத்தகைய தீங்கிழைக்கும் மற்றும் பொய்யான பிரச்சாரங்கள் பதிலளிப்பதற்கு கூட தகுதியற்றது.

மாறாக, நமது கவனம் எப்போதும் நேர்மறையாக முன்னோக்கிய பார்வையில் இருக்க வேண்டும். பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கு நமது கூட்டு முயற்சிகளை வலுப்படுத்த இன்றைய விவாதம் மிகவும் முக்கியமானது. விவாதத்தின் தலைப்பை நாங்கள் மதிக்கிறோம்.

எனவே, எங்கள் கவனம் இந்த தலைப்பில் மட்டுமே இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாமை இந்தியாவின் போர் விமானங்கள் தாக்கி அழித்தன.

இதையடுத்து, இந்தியா- பாகிஸ்தான் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் பிரவேசம் தொடர்பில் நடவடிக்கை !

#image_title

பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் பிரவேசித்தமை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று(09) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பிரவேசித்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் திணைக்களத்திடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

களனி மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களில் இடம்பெற்ற சம்பவங்களை நினைவுகூர்ந்த புத்திக பத்திரன, அடுத்த உயிர் பலி பல்கலைக்கழகங்களுக்குள் பதிவாகுமானால் அது முழு நாட்டிற்குமான பேரிழப்பாகும் என கூறினார்.

மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமது அமைச்சு எந்த நேரத்திலும் தயாராகவுள்ளதென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு முதலிடம் !

#image_title

பொருளாதார நெருக்கடியின் போது மற்றைய நாடுகளை விட இந்தியா இலங்கைக்கு உதவியதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கைக்கு உதவ இந்தியா துணிச்சலான முடிவுகளை எடுத்ததாகவும், சுமார் 3.9 பில்லியன் மதிப்புள்ள இருதரப்பு கடன் மற்றும் அங்கீகாரத்தை வழங்கியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இந்திய அரசாங்கம் துணிச்சலான முடிவுகளை எடுக்க முன்வந்தது மட்டுமல்லாமல், இந்திய மக்களும் இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வந்தனர் என்று குறிப்பிட்டார்

அதிரடியாக சரிந்தது தங்கத்தின் விலை!

#image_title

இந்த நாட்டில் தங்கத்தின் விலை வேகமாக சரிந்துள்ளது.

இன்று (09) காலை கொழும்பு ஹெட்டி வீதி தங்கச் சந்தையில் 24 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 145,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கெரட் தங்கம் ஒரு பவுன் விலை 134,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இம்மாத ஆரம்பத்தில் கொழும்பு ஹெட்டி வீதி தங்கச் சந்தையில் 24 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 184,000 ரூபாவாகவும், 22 கெரட் தங்கம் ஒரு பவுன் விலை 170,000 ரூபாவாகவும் பதிவாகியிருந்தன.

இந்த ஆண்டு இதுவரையிலான அதிகபட்ச தங்கம் விலை ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையின் அதிகபட்ச மதிப்பாகப் பதிவுசெய்யப்பட்டது, இது 24 காரட் தங்கத்தின் ஒரு பவுண்டிற்கு 193,000 ஆகவும், 22 காரட் தங்கத்தின் ஒரு பவுண்டிற்கு 178,500 ஆகவும் பதிவு செய்யப்பட்டது.

மயிரிழையில் உயிர் தப்பிய ஏ.ஆர்.ரஹ்மானின் மகன்

#image_title

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் படப்பிடிப்பு தளத்தில் இடம்பெற்ற விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

குறித்த விபத்து ஏ.ஆர்.அமீனின் பாடல் ஒன்றுக்கான படப்பிடிப்பு இடம்பெற்ற தளத்திலேயே இடம்பெற்றுள்ளது.

இதன்போது, படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தளமும், அலங்கார விளக்குகளும் அறுந்து விழுந்துள்ளன.

எனினும், தான் எல்லாம் வல்ல இறைவனின் அருளால் உயிர்தப்பியதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஏ.ஆர்.அமீன் பகிர்ந்துள்ளார்.

குறித்த அந்த பதிவில்,

இன்று நான் பாதுகாப்பாக உயிருடன் இருப்பதற்கு எல்லாம் வல்ல இறைவனுக்கும் எனது பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் என் ஆன்மீக ஆசிரியருக்கும் நன்றி.

மூன்று இரவுகளுக்கு முன் நான் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பில் இருந்தேன். கேமரா முன் நடிப்பதில் கவனம் செலுத்தியபோது, பொறியியல் மற்றும் பாதுகாப்பை குழு கவனித்துக்கொண்டிருக்கும் என்று நான் நம்பினேன்.

நான் அந்த இடத்தின் நடுவில் இருந்தபோது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செட் மற்றும் சரவிளக்குகள் கீழே விழுந்தன. சில அங்குலங்கள்.

சில வினாடிகளில் மேடை செட் எங்கள் தலையிலேயே விழுந்திருக்கும். நானும் எனது குழுவினரும் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள முடியவில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.

 

கொடூரமாக தாக்கிய ஆசிரியருக்கு எதிராக சட்டநடவடிக்கை !

#image_title

ஆசிரியர் ஒருவர் கடுமையாகத் தாக்கியதால் முழங்கால் ‘சில்’ பகுதி பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படும் மாணவர் ஒருவருக்கு நியாயம் கோரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா பாடசாலையில் தரம் 09இல் கற்கும் ஐ. அப்துல் ஹாதிக் எனும் மாணவனே இவ்வாறு ஆசியரால் தாக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை – குறித்த பாடசாலையில் வைத்து ஐ.எம். பஹாரி எனும் ஆசிரியர் தனக்கு பிரம்பால் ஒரு தடவை அடித்ததாகவும், இன்னொரு தடவை தனது ‘சேர்ட் கொலரை’ பிடித்து தூக்கி தூணில் அடித்து விட்டு, தன்னை தூக்கி வீசியதாகவும் மாணவர் ஹாதிக் தெரிவிக்கின்றார்.

தற்போது பாதிக்கப்பட்ட மாணவர் நடக்க முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் மற்றும் சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் அக்கரைப்பற்றுக் காரியாலயம் ஆகியவற்றில் தாம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அங்கு நடவடிக்கை எடுக்கப்படாத நிலையிலேயே – மனித உரிமை ஆணைக்குழுவில் தாங்கள் முறையிட்டதாகவும் மாணவனின் தாய் மற்றும் சகோதரன் (பெரியப்பாவின் மகன்) கூறுகின்றனர்.

மனித உரிமை ஆணைக்குழுவுக்கு வந்திருந்த மாணவன் ஹாதிக் ஊடகவியலாளருடன் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து பேசினார்.

“சம்பவ நேரத்தில் எனது வகுப்பு மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் மேசையில் தலை வைத்து படுத்திருந்தேன். அப்போது பக்கத்து வகுப்பில் இருந்த பஹாரி என்கிற ஆசிரியர் எங்கள் வகுப்புக்கு வந்து விளையாடிய மாணவர்களுக்கு அடித்தார். அப்போது எனக்கு ஏன் அடிக்கவில்லை என்று ஒரு மாணவன் கேட்டான். அதனால் பிரம்பால் எனக்கு இரண்டு தடவை ஆசிரியர் அடித்தார்” என்று, அன்று நடந்த விடயத்தை மாணவன் ஹாதிக் கூறத் தொடங்கினார்.

“பிறகு தகரத்தில் யார் அடித்தது என்று சேர் கேட்டார். அதற்கு இரண்டு மாணவர்களின் பெயரைக் கூறி அவர்கள்தான் என்றேன். அப்போது மீண்டும் என்னை அடிப்பதற்கு ஆசிரியர் வந்தார். அப்போது ஏன் சேர் திரும்ப திரும்ப அடிக்கிறீங்க என்று கேட்டேன். அதற்கு ‘அறப்படித்த வாப்பாக்கு மூத்த கதை கதைக்காதே’ என்று கூறிவிட்டு – எனது சேர்ட் கொலரைப் பிடித்து தூக்கி தூணில் அடித்து விட்டு, தூக்கி வீசினார்” என அந்த மாணவன் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக தனது கால் அடிபட்டு சதை உடைந்து, முழங்கால் சில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தனக்கு நடக்க முடியாமல் உள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போது பாரம்பரிய முறிவு வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுவரும் மாணவர் ஹாதிக்கின் காலில் ‘பற்று’ போடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மூன்றாந் தவணை பரீட்சை ஆரம்பித்துள்ள நிலையில், பாடசாலைக்கு முச்சக்கர வண்டியில் சென்று – பரீட்சைக்குத் தோற்றி விட்டு, தனது தாய் மற்றும் சகோதரன் (பெரியப்பாவின் மகன்) ஆகியோருடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஹாதிக் சென்றிருந்தார்.

தனது புத்தகப் பையை பாடசாலையிலேயே – தான் விட்டு வந்ததாகவும், அதனை எடுத்து வருமாறு சிலரை அனுப்பிய போதும், தங்கள் குடும்பத்தவர்கள் வந்தால் மட்டுமே புத்தகப் பையை வழங்க முடியும் என, அங்குள்ள ஆசிரியர் ஒருவர் கூறியதாகவும் மாணவன் ஹாதிக் தெரிவித்தார். இதனால், பரீட்சைக்காக படித்து தயாராக முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவனின் சகோதரர் யு.எல். முபாஹித் கூறுகையில்;

“சம்பவம் நடந்து 06 நாட்களின் பின்னர் எனக்கும் எனது பெரியப்பா மற்றும் அவரின் மகனுக்கும் எதிராக பாடசாலையின் அதிபர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நாங்கள் அவரை அச்சுறுத்தியதாக அவர் அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இது பொய்யான முறைப்பாடு” என்றார்.

“அதிபரின் முறைப்பாடு தொடர்பில் கடந்த 04ஆம் திகதி அக்கரைப்பற்று பொலிஸார் எம்மை அழைத்திருந்தார்கள். நாங்கள் சென்றோம். ஆனால் முறைப்பாடு செய்த அதிபர் வரவில்லை. நாங்கள் வாக்குமூலத்தை வழங்கி விட்டு – வந்து விட்டோம்” எனவும் அவர் கூறினார். பாதிக்கப்பட்ட தனது தம்பியான மாணவன் ஹாதிக்கை தனது முச்சக்கர வண்டியிலேயே வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாணவன் ஹாதிக்கின் தாய் ஆத்திக்கா உம்மா இச் சம்பவம் குறித்து பேசுகையில், தனது மகனை ஆசிரியர் அடித்து, அவரைத் தூக்கி வீசியதாகக் கூறினார். இதன்போது தனது மகனின் சட்டை பொத்தான்கள் அறுந்து போனதாகவும், அதனை கட்டுவதற்காக பக்கத்து வீட்டுக்கு ஊசி – நூலை ஆசிரியர்கள் கேட்டு அனுப்பியிருந்ததாகவும் கூறினார். “விடயத்தை நான் அறிந்ததும் பாடசாலைக்குச் சென்றேன். அங்கு எனது பிள்ளையை பார்ப்பதற்கு ஆசிரியர்கள் முதலில் அனுமதிக்கவில்லை. பின்னர் நான் வாக்குவாதப்பட்டுத்தான் பிள்ளையை பார்த்தேன். அதன் பிறகு அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம்”.

“சம்பவம் நடந்த போது எனது பிள்ளையிடம் அதிபர் சென்று – என்ன நடந்தது என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஆசிரியர் தன்னைத் தாக்கியதாக மகன் கூறியுள்ளார். அப்போது, ‘சேர் அடித்திருக்க மாட்டார், நீ சறுக்கி விழுந்திருப்பாய்’ என்று அதிபர் கூறியிருக்கிறார். அதனால்தான் பொலிஸ் நிலையத்துக்குச் செல்ல நாங்கள் முடிவு செய்தோம்” எனவும் மாணவனின் தாயார் கூறினார்.

“அக்கரைப்பற்று வைத்தியசாலையில் எனது மகன் அனுமதிக்கப்பட்ட போதும், அங்கு அவருக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை எனக் கூறி – ‘டிக்கட்’ வெட்டி அனுப்பி விட்டனர். ஆனால், மகனுக்கு நடக்க முடியவில்லை. அதனால் மகனை காத்தான்குடியிலுள்ள தனியார் மருத்துவ நிலையமொன்றுக்கு அழைத்துச் சென்று வைத்தியர் ஒருவரிடம் காட்டினோம். அவர் மருந்து வழங்கினார். அதைப் பாவித்த போதும் மகனுக்கு குணமாகவில்லை. இதன் பிறகு நீலாவணையிலுள்ள பாரம்பரிய முறிவு வைத்தியர் ஒருவரிடம் கொண்டு சென்றபோது, பிள்ளையின் முழங்கால் சில்லில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சதை நொறுங்கியுள்ளதாகவும் கூறி – பத்து போட்டுள்ளார்” என மாணவனின் தாயார் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, அந்த மாணவனை தான் தாக்கவேயில்லை என்கிறார் ஆசிரியர் பஹாரி.

மாணவன் மற்றும் அவரின் குடும்பத்தாரின் குற்றச்சாட்டு குறித்து ஆசிரியரைத் தொடர்பு கொண்டு வினவியபோதே, அவர் இந்தப் பதிலை வழங்கினார். குறித்த மாணவனின் பக்கத்து வகுப்பில் தான் கற்பித்துக் கொண்டிருந்தாகவும், சம்பந்தப்பட்ட மாணவனின் வகுப்பில் மாணவர்கள் குழப்படி செய்தமையினால் அவர்களை அதிபரிடம் செல்வதற்கு தான் அழைத்த போது, மாணவன் ஹாதிக் தவறான வார்த்தைகளைக் கூறி, முடியாது எனச் சொன்னதாகவும் ஆசிரியர் பஹாரி தெரிவித்தார்.

“இதன் போது அந்த மாணவனின் சேட்டில் எனது விரல் தவறுதலாகப் பட்டதால், அவரின் சேர்ட் பொத்தான்கள் அறுந்து விட்டன. வேறு அவரை நான் தாக்கவில்லை” எனவும் குறிப்பிட்டார். ஹாதிக் எனும் மேற்படி மாணவனின் பெரியப்பா மற்றும் அவரின் மகன்மார் இந்தப் பாடசாலை நிர்வாகத்துடன் சில காலங்களுக்கு முன்னர் பிரச்சினைப்பட்டதாகவும், அது குறித்து அவர்களுக்கு எதிராக அதிபர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறும் ஆசிரியர் பஹாரி, அதற்குப் பழி வாங்குவதற்கான சந்தர்ப்பமாக தற்போதைய விடயத்தை மாணவன் ஹாதிக்கின் குடும்பத்தினர் கையில் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால், ஹாதிக் எனும் மாணவனின் பெரியப்பா குடும்பத்தினர் பாடசாலை நிர்வாகத்துடன் பிரச்சினைப்பட்ட சம்பவம் நடக்கும் போது, இந்தப் பாடசாலையில் தான் கடமையாற்றவில்லை என்றும், அதற்கு சில காலத்துக்குப் பின்னரே தான் இந்தப் பாடசாலைக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

 

இலங்கை நியூசிலாந்து டெஸ்ட்- முதல்நாள் ஆட்டம் நிறைவு

#image_title

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி இன்றைய ஆட்ட நேர நிறைவில் 6 விக்கட் இழப்புக்கு 305 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 87 ஓட்டங்களையும் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

மேலும், எஞ்சலோ மெத்யூஸ் 47 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்ததோடு, டெஸ்ட் அரங்கில் 7000 ஓட்டங்களைக் கடந்த இலங்கையின் மூன்றாவது வீரராகவும் அவர் இன்று பதிவானார்.