இரவு நேர கேளிக்கை விடுதியில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு நகரமான முர்சியாவில் இரவு நேர கேளிக்கை விடுதியில் வார இறுதியை முன்னிட்டு பலர் கூடியிருந்த நிலையில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீ அருகில் இருந்த கட்டிடங்களுக்கும் வேகமாக பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். சில மணி நேர போராட்டத்துக்கு பின்னர் இந்த தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
எனினும் இந்த தீ விபத்தில் 13 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.