இலங்கைக்கு கடத்தவிருந்த 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

Date:

மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரை இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து கியூ பிரிவு பொலிஸாரும், தனிப்பிரிவு பொலிஸாரும் வேதாளை கடற்கரை பகுதிக்கு விரைந்து சென்றனர்.

 

அப்போது வேதாளை தெற்கு கடற்கரை பகுதியில் ஒரு இடத்தில் கடல் அட்டைகள் பதப்படுத்தப்படுவதை கண்ட பொலிஸார் அவர்களை பிடிக்க முயன்ற போது, அங்கிருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

 

இதையடுத்து பதப்படுத்திய சுமார் 250 கிலோ கடல் அட்டை மற்றும் அதை பதப்படுத்த பயன்படுத்திய பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த பொலிஸார் அவற்றை மண்டபத்தில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு தப்பி ஓடிய கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.

 

வேதாளை கடற்கரை பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட இந்த கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்ததாகவும், அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.20 இலட்சம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...