இளம் வீரர் திலக் வர்மா விளாசிய முதல் அரைசதத்தை ரோகித் சர்மாவின் மகளுக்கு அர்ப்பனிப்பு

Date:

மேற்கு இந்திய அணிக்கு எதிரான முதல் ரி20 போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான திலக் வர்மாஇ நேற்று நடைபெற்ற இரண்டாவது ரி20 போட்டியில் பிரஷரான சூழலில் விளையாடி 39 பந்துகளில் அரைசதம் அடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் திலக் வர்மா அடிக்கும் முதல் அரைசதம் இதுவாகும். இந்த அரைசதத்தை வித்தியாசமான முறையில் இரு கட்டை விரல்களையும் மாற்றி மாற்றி காண்பித்து குழந்தையை போல் கொண்டாடினார். இதனால் திலக் வர்மாவின் கொண்டாட்டம் யாரை பிரபலக்கிறது என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பினர்.

 

இந்த நிலையில் போட்டிக்கு பின் திலக் வர்மா பேசுகையில்இ இந்த அரைசதத்தை ரோகித் சர்மா சாரின் மகள் சமைராவுக்கு அர்ப்பணிக்கிறேன். அதற்காக தான் அப்படியொரு கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினேன். நாங்கள் இருவரும் அதிக நேரம் ஒன்றாக விளையாடி இருக்கிறோம். நான் எப்போது என் முதல் அரைசதம் மற்றும் சதத்தை விளாசிகிறோனோஇ அப்போது சமைராவுக்கு அர்ப்பணிப்பதாக சொல்லி இருந்தேன். நாங்கள் அப்படி விளையாடுவோம் என்பதால்இ அப்படியொரு கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினேன். அதேபோல் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ரோகித் மற்றும் ரெய்னா இருவருமே எனக்கு ரோல் மொடல் என்றுள்ளார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...