கடைசி வரை போராடிய இலங்கை வீரர் ஷானகா..126 இலக்கை எட்ட முடியாமல் வார்னர் அணி படுதோல்வி

Date:

கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் துபாய் கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது.

இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் 24வது போட்டியில், கல்ஃப் ஜெயண்ட்ஸ் மற்றும் துபாய் கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.

துபாய் கேபிட்டல்ஸ் அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹெட்மையர் 34 (28) ஓட்டங்களும், கேப்டன் வின்ஸ் 32 (28) ஓட்டங்களும் எடுத்தனர்.

மிரட்டலாக பந்துவீசிய ஓலி ஸ்டோன் 14 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். குக்லெஜின் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

பின்னர் களமிறங்கிய துபாய் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேப்டன் வார்னர் 11 ஓட்டங்களிலும், சாம் பில்லிங்ஸ் 12 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த வீரர்களும் 20 ஓட்டங்களை கூட தாண்டவில்லை. ஆனால் இலங்கை வீரர் தசுன் ஷானகா மட்டும் அணியின் வெற்றிக்காக நிலைத்து நின்று ஆடினார்.

அவருக்கு உறுதுணையாக யாரும் நின்று ஆடாததால், துபாய் கேபிட்டல்ஸ் அணி 107 ஓட்டங்களுக்கு சுருண்டது. கடைசி வரை ஆட்டமிழக்காத ஷானகா 26 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 24 ஓட்டங்கள் எடுத்தார்.

கல்ஃப் ஜெயண்ட்ஸ் தரப்பில் ஆயன் அஃப்சல் கான் 2 விக்கெட்டுளும், எராஸ்மஸ், முஸரபாணி, ஓவர்டன், ஜோர்டான் மற்றும் ஸுபைர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...