சப்ரகமுவ பல்கலையில் மோதல் – 7 பேர் படுகாயம்

Date:

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நேற்று (11) இடம்பெற்ற கரப்பந்தாட்டப் போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் 7 மாணவ, மாணவிகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மற்றும் வர்த்தக பீடம் என்பவற்றுக்கிடையில் கரப்பந்தாட்ட போட்டி நடத்தப்பட்டதன் பின்னரே இரு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

போட்டியில் தமது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத ஒரு பிரிவினரால் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதில் மூன்று மாணவர்களும் நான்கு மாணவிகளும் காயடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்போட்டி பல்கலைக்கழக நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...