2024-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலக வாய்ப்புள்ளது என்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் மோசமான செயல்பாடுகள் காரணமாக அணியிலிருந்து வெளியே அமர வைக்கப்பட்டார். இருந்தாலும் தரமான ஆல் ரவுண்டான அவர் நிச்சயம் அடுத்த ஆண்டு சி.எஸ்.கே அணியில் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அண்மையில் ஓய்வை அறிவித்த பென் ஸ்டோக்ஸ் மீண்டும் 50 ஓவர் உலக கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். அதோடு ஓய்விலிருந்து மீண்டு வரும் பென் ஸ்டோக்ஸ் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் விளையாடினால் அடுத்த 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ஓய்வு எடுத்துக் கொண்டு அந்த நேரத்தில் தனது காலில் அறுவை சிகிச்சை செய்யவும் வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.