அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சியாட்டிலுக்கு பயணிகள் ரயில் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 200-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். குறித்த ரயில் செல்லும் பாதையில் உள்ள மூர் பூங்கா அருகே தண்ணீர் லொரி ஒன்று தண்டவாளத்தை கடக்க முற்பட்ட போது அந்த லொரி மீது ரயில் மோதி தடம் புரண்டடுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
குறித்த விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தில் படுகாயம் அடைந்த 16 பேரை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.