நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி

Date:

இந்திய அணிக்கும் நேபாள அணிக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணியின் தலைவா் ரோகித் சர்மா முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளார்.

இந்த போட்டியில் வெற்றி பெறுவது இந்திய அணிக்கு முக்கியத்துவமாக அமைந்துள்ளது.

ஏற்கனவே இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வீதம் வழங்கப்பட்டது.

“ஏ” குழுவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாள அணிகள் உள்ளதுடன், அந்த குழுவில் பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் வெற்றிப்பெற்று முன்னிலையில் உள்ளது.

பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் நேபாள அணி தோல்வியை தழுவியுள்ள நிலையில், இந்திய அணி இதுவரை எந்த போட்டியிலும் வெற்றிப்பெறவில்லை.

எனவே இன்றைய போட்டி இந்திய அணிக்கு தீர்மானமிக்கதாக அமைந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நான் ஹீரோ இல்ல… அவர்தான் ஹீரோ – சந்தானம்

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர்...

அடுத்த வருடம் மே மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த திட்டம்

இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல்...

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது- ஷேன் வாட்சன்

வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான...

13.4 ஒவரில் இலக்கை எட்டி ஆர்சிபி அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு...